துபாயில் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு
துபாய்: துபாய் வருகை புரிந்த ஈமான் அமைப்பின் முன்னாள் ஆடிட்டரும், தமிழ்நாடு பண்பாட்டுக்கழகத்தின் நிறுவன புரவலருமான திருவிடச்சேரி எஸ். எம். ஃபாரூக்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஊடகவியாளர் முதுவை ஹிதாயத், சமூக ஆர்வலர் முஹம்மது ராஷிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்சி சையது எழுதிய 'நிலாக்காலப் பூக்கள்' என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர் அமீரகத்தில் 40 ஆண்டுகாலம் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. - நமது செய்தியாளர் காஹிலா