மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1434 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1434 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1434 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1434 days ago
மும்பை : போதை வழக்கில் 25 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் ஜாமினில் இன்று(அக்., 30) வெளியே வந்தார்.
சொகுசு கப்பலில், போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டனர். 25 நாட்களுக்கும் மேலாக சிறை வாசத்தில் இருந்த ஆர்யன் கானுக்கு நேற்று முன்தினம் மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஜாமின் நிபந்தனைகளை உயர் நீதிமன்றம் நேற்று வெளியிட்டது.
உத்தரவாதமாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி ஜாமின் பெற உத்தரவிட்டது. நேற்றே அவர் ஜாமினில் வெளிவருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும் உரிய நேரத்திற்குள் ஜாமின் உத்தரவு சிறை நிர்வாகத்திற்கு வந்து சேராததால் ஆர்யன் கான் நேற்று விடுவிக்கப்படவில்லை. நேற்று இரவும் அவர் சிறையில் கழிக்கவேண்டி இருந்தது.
இந்நிலையில் இன்று காலை அவர் சிறையில் இருந்து விடுதலையானார். ஆர்தர் ரோடு சிறையிலிருந்து வெளியே வந்த ஆர்யன் காரில் ஏறி நேராக அவரது மன்னத் வீட்டிற்கு சென்றார். நேற்றே ஆர்யன் கான் விடுதலையாவார் என எண்ணி ரசிகர்கள் தொடர்ந்து நேற்று முதல் ஷாரூக்கானின் இல்லத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர்.
1434 days ago
1434 days ago
1434 days ago
1434 days ago