உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புனித் ராஜ்குமாருக்காக மோட்ச தீபம் ஏற்றி வழிபட்ட இளையராஜா

புனித் ராஜ்குமாருக்காக மோட்ச தீபம் ஏற்றி வழிபட்ட இளையராஜா

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் (அக்டோபர் 29) மாரடைப்பு ஏற்பட்டு தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, மறைந்த புனித் ராஜ்குமார் ஆன்மா சாந்தியடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தார். மோட்ச தீபம் ஏற்றிய பின்னர் அவர் புனித் ராஜ்குமார் ஆன்மா சாந்தியடையட்டும் என்று மூன்று முறை கூறினார். இந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா, ‛அன்பர் புனித் ராஜ்குமாரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தக் கடினமான காலகட்டத்தில் அவரது குடும்பத்தாருக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்,' எனப் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !