உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா படத்தில் பாடிய இரண்டு இசையமைப்பாளர்கள்

சூர்யா படத்தில் பாடிய இரண்டு இசையமைப்பாளர்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்க மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா, எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. பிப்ரவரி 4-ந்தேதி படம் வெளியாகிறது. இந்த படத்திற்காக டி.இமானின் இசையில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத் ஆகிய இரண்டு இசையமைப்பாளர்களும் தலா ஒரு பாடலை பின்னணி பாடியிருக்கிறார்கள். விரைவில் இந்த பாடல்கள் வெளியாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !