உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தங்கம் கடத்தல் வழக்கு: அக்ஷரா ரெட்டியிடம் விசாரணை

தங்கம் கடத்தல் வழக்கு: அக்ஷரா ரெட்டியிடம் விசாரணை

கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கொச்சி விமான நிலையத்தில் 20 கிலோ தங்கம் கடத்தியதாக பாயிஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

இந்த நிலையில் பாயிசுக்கு பல நடிகர், நடிகைளுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடிகை அக்ஷரா ரெட்டிக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார்.

இதை தொடர்ந்து நேற்று கோழிக்கோடு அமலாக்கத்துறை அலுவலகத்தில் அக்ஷரா ரெட்டி ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தல் மற்றும் பயசுடன் உள்ள தொடர்பு பற்றி 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

நடிகை அக்ஷரா ரெட்டி, மிஸ்.ஆந்திர பிதேரசம் அழகி போட்டியில் டைட்டில் வென்றவர். பிக் பாஸ் உள்ளிட்ட ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவர். விஜய் டி.வி நடத்திய வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார். பில்கேட்ஸ் என்ற கன்னட படத்திலும், தாதி என்ற தெலுங்கு படத்திலும், காசு மேல காசு என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !