உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வடிவேலுக்காக காத்திருக்கும் இரண்டு இயக்குனர்கள்

வடிவேலுக்காக காத்திருக்கும் இரண்டு இயக்குனர்கள்

சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் வடிவேலு. இந்த படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும் வடிவேலு, கவுதம் மேனன், நலன் குமாரசாமி இயக்கும் படங்களிலும் நாயகனாக நடிக்க பேசி வருகின்றனர்.

இதில், நலன் குமாரசாமி பல ஆண்டுகளுக்கு முன்பே வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டிருந்தார். பின்னர் அந்த முயற்சியை கிடப்பில் போட்டார். இந்த நிலையில் தற்போது மீண்டும் வடிவேலுவை காமெடி கலந்த ஒரு கதையில் இயக்க ஸ்லிரிப்ட் தயார் செய்துள்ளார் நலன் குமாரசாமி.

அதேப்போன்று தற்போது சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கி வரும் கவுதம் மேனனும் வடிவேலுவுக்காக காமெடி கலந்த ஒரு காதல் கதையை தயார் செய்திருக்கிறாராம். அதனால் அடுத்தபடியாக இந்த இரண்டு இயக்குனர்களின் படங்களிலும் வடிவேலு நடிக்கலாம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !