மலையாள இயக்குனர் கே.பி.சசி காலமானார்
ADDED : 1061 days ago
மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குனர் கே.பி.சசி. கார்டூனிஸ்டாக வாழ்க்கை தொடங்கியவர் பிறகு டாக்குமெண்டரி படங்களை இயக்கினார். 1994ம் ஆண்டு வெளியான 'இலையும் முள்ளும் படத்தின் மூலம் திரைப்பட இயக்குனராகி பிரபலமானார். இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
2003ம் ஆண்டு பாலிவுட் திரைப்படமான 'ஏக் அலக் மௌசம்' படத்தை இயக்கினார். இப்படத்தில் நந்திதா தாஸ், அனுபம் கேர் மற்றும் ரேணுகா ஷஹானே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
64 வயதான கே.பி.சசி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.