இசை என்பது டெக்னாலஜி அல்ல, டெக்னிக் - இளையராஜா
இந்தியத் திரையுலகின் மதிப்பு மிக்க இசையமைப்பாளரான இளையராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐதராபாத்தில் இந்த மாதம் 26ம் தேதி பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். அது தொடர்பாக நேற்று ஐதராபாத்தில் அவருடைய ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
தெலுங்கிலும் பல எண்ணற்ற மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்து அங்கும் தனக்கென தனி இடத்தைத் தன் இசையால் பிடித்துள்ளவர் இளையராஜா. ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.