மூன்று கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்
ADDED : 1027 days ago
'காவல்துறை உங்கள் நண்பன்' படைத்த தயாரித்த பீ.ஆர் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை கே.பாலையா இயக்குகிறார். இதில் முதன்மை கதாபாத்திரங்களில் சுரேஷ் ரவி, யோகி பாபு இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் நடிக்க மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். அதன்படி, இதில் தீபா பாலு, ப்ரீகிடா சகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோர் நடிப்பதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.