இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் மீரா 16, மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரதே பரிசோதனைக்கு பின் அவரது உடல் அஞ்சலிக்காக விஜய் ஆண்டனி வீட்டில் வைக்கப்பட்டது. திரையுலகினர் பலரும் மீராவிற்கு அஞ்சலி செலுத்தினர். விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறினர்.
அவரை வீட்டின் பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவேரி மருத்துவமனையில் இருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மீராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
மகளின் இந்த தற்கொலை சம்பவம் விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஓராண்டாகவே மன அழுத்த பிரச்னையால் மீரா அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக மருத்துவ சிகிச்சையும் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
திரையுலகினர் அஞ்சலி
பிரதே பரிசோதனைக்கு பின் மீராவின் உடல் சென்னையில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. விஜய் அம்மா ஷோபா சந்திர சேகர், குஷ்பு, சதீஷ், எடிட்டர் மோகன், மோகன் ராஜா, அமைச்சர் உதயநிதி, இசையமைப்பாளர் யுவன், பாரதிராஜா, அலிஷா அப்துல்லா, ரித்திகா சிங், மன்சூரலிகான், நடிகை சுதா, லலித், டி சிவா, தனஞ்செயன், கிருத்திகா உதயநிதி, சிம்பு, பார்த்திபன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் நேரில் மீரா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். விஜய் ஆண்டனி அவரது மனைவிக்கு ஆறுதல் கூறினர்.
திரையுலகினர் இரங்கல்
விஜய் ஆண்டனியின் மகள் மீரா மறைவுக்கு கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ், வெங்கட்பிரபு, ஹரிஷ் கல்யாண், நந்திதா, ராதிகா, சரத்குமார், ராகவா லாரன்ஸ், ஜெயம் ரவி, குஷ்பு, அருண் விஜய், கவின், ஜீவா, அனிருத், கிருஷ்ணா, அதுல்யா, இந்துஜா, சிம்பு, விஷால் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தும், விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறியும் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.