உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாளை படம் ரிலீஸாக இருக்கும் நிலையில் கதாசிரியர் திடீர் மரணம்

நாளை படம் ரிலீஸாக இருக்கும் நிலையில் கதாசிரியர் திடீர் மரணம்

மலையாளத்தில் சின்ன பட்ஜெட் படமாக உருவானாலும் சமீபத்தில் டைட்டில் சர்ச்சையில் பரபரப்பாக பேசப்பட்ட படம் 'ஒரு பாரத சர்க்கார் உல்பனம்'. இந்த படம் மார்ச் 1ம் தேதியே ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் இடம் பெற்றுள்ள பாரத என்கிற பெயரை நீக்கினால் தான் சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படும் என கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரத என்கிற பெயரை நீக்கிவிட்டு 'ஒரு சர்க்கார் உல்பனம்' என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை டி.வி ரஞ்சித் என்பவர் இயக்கியுள்ளார். 96 புகழ் கவுரி கிஷன், மலையாள முன்னணி காமெடி நடிகர் அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு கதாசிரியர் நிசாம் ராவுத்தர் என்பவர் கதை எழுதியுள்ளார். படம் நாளை (மார்ச்-8) வெளியாக இருக்கும் நிலையில் திடீரென நேற்று காலை ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் நிசாம் ராவுத்தர். இவரது வயது 49. இவரது மரணம் படக்குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கு முன் சச்சாரியாயுடே கர்ப்பிணிகள், பாம்பே மிட்டாய் உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் கதை எழுதியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !