உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பழநி பஞ்சாமிர்தம் பற்றி சர்ச்சை : சினிமா இயக்குனர் மோகன்.ஜி கைது

பழநி பஞ்சாமிர்தம் பற்றி சர்ச்சை : சினிமா இயக்குனர் மோகன்.ஜி கைது

பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சினிமா இயக்குனர் மோகன்.ஜி கைது செய்யப்பட்டார்.

பிரபல சினிமா இயக்குனர் மோகன்.ஜி. பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம், திரவுபதி, பகாசூரன் போன்ற படங்களை இயக்கியவர். அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடியவர். அடுத்து ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

சமீபத்தில் இவர் பழநி கோயிலில் வினியோகம் செய்யப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலந்து கொடுப்பதாக கூறி இருந்தார். இது பற்றி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்த அவரை, இன்று(செப்., 24) காலை போலீசார் கைது செய்தனர்.

சட்டத்திற்கு புறம்பான கைது
மோகன் ஜி கைது பற்றி தமிழக பா.ஜ.வை சேர்ந்த அஸ்வத்தாமன் வெளியிட்ட பதிவில், ‛‛சினிமா இயக்குனர் நண்பர் திரௌபதி மோகன் ஜி, தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை. திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !