மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
253 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
253 days ago
புதியவர்கள் இணைந்து உருவாக்கி வரும் படம் 'சாட்சி பெருமாள்'. ஆர்.பி.வினு இயக்குகிறார், மதன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார், மஸ்தான் இசை அமைக்கிறார். அசோக் ரங்கராஜன், வி.பி.ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே., வீரா உட்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் வினு கூறும்போது “பத்திரப்பதிவு அலுவலகங்களில் எப்போதும் சாட்சி கையெழுத்துப் போடுபவர்கள் இருப்பார்கள். இது அவர்களின் தொழில், ரேஷன் கார்டு, ஆதார்காடு சகிதம் அங்கேயே இருப்பார்கள். அவர்களில் ஒருவரின் கதை. இப்படி சாட்சி கையெழுத்து போடுகிறவர்களுக்கு பெரிய பிரச்னைகள் எதுவும் இருக்காது. அரிதாக ஒருசிலர் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள் அவர்களில் ஒருவரின் கதைதான் இது. அவருக்கு ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதை எப்படித் தீர்க்கிறார் என்பதை சொல்லும் படம். என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் பாதிப்பில் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறேன்.
பெரியகுளம், அகமலையில் படப்பிடிப்பை முடித்துள்ளோம். யதார்த்தமான இந்தப் படத்தைப் பட விழாக்களுக்காகவே உருவாக்கினேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த திரைப்பட விழாக்களில் பங்கேற்று 12 விருதுகளைப் பெற்றிருக்கிறது. மேலும் சில பட விழாக்களுக்கு அனுப்ப இருக்கிறோம். விரைவில் ஓடிடி-யில் வெளியாக இருக்கிறது” என்றார்.
253 days ago
253 days ago