உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வரிசையாக சரியும் வசூல் நிலவரம் : கூட்டுக்குழு அமைக்கப்படுமா? கூடி பேசுவார்களா?

வரிசையாக சரியும் வசூல் நிலவரம் : கூட்டுக்குழு அமைக்கப்படுமா? கூடி பேசுவார்களா?

கடந்த வாரம் வெளியான படங்களில் ‛ஜென்ம நட்சத்திரம்', ‛பன் பட்டர் ஜாம்' கொஞ்சம் பேசப்பட்டது. ஆனாலும், இந்த இரண்டு படங்களில் வசூல் 1 கோடியை தாண்டவே படாதபாடு பட்டு இருக்கிறது. இந்த மிகக்குறைவான வசூல் படக்குழுவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆகவே, இரண்டு படக்குழுவும் சென்னை தவிர்த்த மற்ற ஊர்களுக்கு சென்று படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

வரிசையாக தமிழ் படங்களின் வசூல் நிலவரம் குறைந்து வருவது தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என அனைவரையும் பயப்பட வைத்துள்ளது.

சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ ரைட்சும் முன்போல விற்பதில்லை, எனவே, அழிந்து வரும் சினிமாவை காப்பாற்ற அனைத்து சினிமா சங்கங்களும் கூடி பேச வேண்டும். கூட்டுக்குழு அமைக்க வேண்டும். அதில் எடுக்கும் முடிவு படி ரிலீஸ் தேதி உள்ளிட்ட விஷயங்கள் இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால், தமிழ் சினிமா சங்க ரீதியாக பிரிந்து இருப்பதால், இதை யார் முன்னெடுப்பது, யார் ஒருங்கிணைப்பது என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. சினிமாவில் இருந்து சென்றவர்தான் துணை முதல்வராக இருக்கிறார். அவராவது இவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். சினிமா வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !