வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை
2009ல் வெளியான ‛வைகை' படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை சுவாசிகா. அதன்பின் சில படங்களில் நடித்தாலும் கடந்தாண்டு வெளியான ‛லப்பர் பந்து' அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து மாமன், ரெட்ரோ போன்ற படங்களில் நடித்தார். தற்போது கருப்பு படத்தில் நடித்துள்ளார். சினிமா படங்கள், வெப்சீரிஸ் இரண்டிலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்கிறார்.
சினிமாவில் நடக்கும் பாலியல் தொந்தரவு தொடர்பாக இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது ‛‛15 ஆண்டுகளாக இந்த துறையில் உள்ளேன். நான் அதுபோன்று எந்த பிரச்னையையும் சந்திக்கவில்லை. இந்த பிரச்னை சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் நடக்கிறது. இதை தடுக்க கடுமையான சட்டங்கள் வேண்டும். பெண்கள் வாழ்வில் முன்னேற தைரியமாக இருக்க வேண்டும். எந்த இடத்திலும் வளைந்து செல்லக்கூடாது. ஒருவராக தவறாக நடக்க முயன்றால் அவர்களை எதிர்கொள்ளவும், சமூகத்தின் முன் நிறுத்தவும் தயங்க கூடாது'' என்றார்.