உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை

அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை


இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தில் பிறந்து சர்வதேச அளவில் புகழ்பெற்றார். சினிமாவிற்கு இசை அமைப்பதோடு, இசை நிகழ்ச்சிகள் நடத்துவதோடு, பல ரிக்கார்டிங் ஸ்டூடியோக்களையும் நிர்வகித்து வருகிறார். சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை அவர் தன் மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்தார், இளைய மகள் சமையல் கலை நிபுணராக உள்ளார். மகன் தந்தையை போல இசை உலகில் இருக்கிறார். மனைவியை பிரிந்தார்.
இந்த நிலையில் அதிக வேலை பளுவின் காரணமாக தன்னால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியாமல் வாழ்க்கை இழந்து விட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: சில நேரங்களில் பல திட்டங்களை தீட்டி செயல்படுகிறோம். ஆனால் எதிர்பாராத விதமாக அவை முடியாமல் போகலாம். நானும் அப்படித்தான். என்னை பொறுத்தவரை, எதைப்பற்றியும் யோசிக்காமல் காலத்தின் போக்கிலேயே, நதி போல ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

முன்பெல்லாம் வெறி பிடித்தவன் போல இரவு, பகல் பாராமல் வேலை செய்தேன். அப்படி அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம். அந்தவகையில் இப்போது என் தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கவும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் நான் வேலைப்பளுவை குறைத்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (5)

vijay, coimbatore
2025-09-05 17:33:42

இளையராஜா சார் கூடத்தான் அவர் பிஸியான இருந்தப்போ இரவு பகல் பாராமல், முக்கியமா நேரத்துக்கு ஸ்டுடியோக்கு போயி வேலை செய்வார். ஒரே நாளில் பல பாடல்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களின் பாடல்களுக்கு மெட்டெழுதி, இசை அமைத்திருக்கிறார். அவரது நூற்றுக்கணக்கான படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்கள் இன்றும் நினைவில் வச்சு ரசிக்கக்கூடியவை. உமது படங்களில் ஒரு பத்து-பதினைந்து படங்களின் (இந்தியும் சேர்த்து) பாடல்கள் மட்டும்தான் இன்றும் நினைவில் இருக்கும்படி இருக்கும். இளையராஜாவின் மைனஸ்-ஆக அவரது தலைக்குள் கர்வம், திமிர் இருந்தாலும், உள்ளே மசாலாவும் திறமையும் இருந்துச்சு, மத்தவங்களை (உன்னையும் சேர்த்து) நல்லா வேலை வாங்கிருக்கார். அவர் குடும்பத்தில் சில குழந்தைகளினால் பிரச்சினைகள் இருந்தாலும், மனைவி ஜீவாவுடன் கடைசி வரை நல்லபடி வாழவில்லையா?. நீ கீ-போர்டு, கம்ப்யுட்டர் மட்டுமே வச்சு அதன் மூலமாகவே நிறைய பாடல்கள் கொடுக்க ரொம்ப சிரமம் எடுத்து இரவு பகல் பாராமல் வேலை செய்ததினால் வந்த பிரச்சினைதான் உன் மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் என்றும் ஊர்-உலகத்தில் மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.


என்றும் இந்தியன், Kolkata
2025-09-05 17:02:45

அதிக வேலையால் யாரும் வாழ்க்கையை இழக்கமாட்டார்கள். உலகில் உள்ள எல்லா வேலைக்கு செல்பவர்களிடமும் அதிக வேலை தான் இருக்கின்றது. வாழ்க்கையை இழந்தாய் என்றால் அது பணம் பணம் பணம் அதனால் மட்டுமே. பணம் தான் வாழ்க்கையின் இலக்கு என்ற எண்ணம் மனதினில் தோன்றிடில் அப்போது தான் வாழ்க்கையில் இழப்பு ஏற்படும்


Anand, chennai
2025-09-05 10:58:04

உன்னைவிட பலமடங்கு வேலை பளு உள்ளவர்கள் உலகத்தில் கோடானு கோடி, நீ வாழ்க்கையை இழந்தது வேலை பளுவால் அல்ல. திமிரால்.


Anbilkathiravan, Trichy
2025-09-04 19:06:38

உண்மைதான். நாம்தான் குடும்பத்திற்காக நேரத்தை திட்டமிட்டு ஒதுக்க வேண்டும்.


MUTHU, Sivakasi
2025-09-04 18:51:42

வேலை என்பதை தன்னுடைய தனிப்பட்ட செயல் என்றும் வாழ்க்கை என்பது வேறு சில பொழுதுபோக்க நிகழ்வுகள் என்று நினைத்ததால் வரும் சலிப்பு. செய்யும் தொழிலே தெய்வம் என்பது living is the very nature of god என்பதை புரியாததால் வந்த கருத்து இது. தெய்வத்துடன் ஒன்றியிருக்க வைத்த மாபெரும் வாய்ப்பு இந்த இசைத்தொழில் என்பதனை புரிந்துகொள்ளவில்லை போலும்.