சூர்யாவின் 'கருப்பு' படம் குறித்து நட்டி நடராஜ் வெளியிட்ட தகவல்!
ஆர்.ஜே .பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, சுவாசிகா, நட்டி நடராஜ், சிவதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கருப்பு'. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த கருப்பு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நட்டி நடராஜ் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறுகையில், ''நீதிமன்றம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த படத்தில் ஆர்.ஜே .பாலாஜி சொல்லி இருக்கிறார். நாமெல்லாம் வெளியில் இருந்து தான் நீதிமன்றத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீதிமன்றத்துக்குள் நடக்கும் விஷயங்கள் நமக்கு தெரியாது. குறிப்பாக ஒரு கேஸ் எப்படி நடத்தப்படுகிறது என்பது வக்கீலுக்கு தான் தெரியும். அதுபோன்ற விஷயங்களை ஆராய்ந்து இந்த படத்தில் அவர் காட்சிகள் அமைத்திருக்கிறார். அதனால் இந்த படம் ஒரு சுவராஸ்யமான வித்தியாசமான படமாக இருக்கும்'' என்று நட்டி நடராஜ் கூறியுள்ளார்.