உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

ராஜேஷ் எம் செல்வா இயக்கி உள்ள ‛தி கேம்' என்ற வெப்சீரிஸில் நடித்து இருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அவர் அளித்த பேட்டியில், ''சினிமாவில் பத்தாண்டுகளை கடந்துவிட்டேன். இப்போது இந்த வெப்சீரிஸ் தவிர, விஷ்ணு விஷால் உடன் ஆர்யன், ரவி மோகனின் ப்ரோ கோட் படங்களில் நடித்து வருகிறேன். விக்ரம் வேதா, இறுகப்பற்று என பல படங்களில் எனக்கு மனைவி கேரக்டர்களே அதிகம் வருகின்றன. அது என்ன ராசி என தெரியவில்லை.

சோஷியல் மீடியாவுக்கு நான் அதிக நேரம் கொடுப்பது இல்லை. அளவோடு நிறுத்திக் கொள்வேன். ஏஐ உள்ளிட்ட வளர்ச்சி, நல்ல விஷயம். அதேசமயம் ஆபத்தும் இருக்கிறது. பெண்கள் போலி போட்டோ, வீடியோவால் பாதிக்கப்படலாம். அதற்கான சட்ட நடவடிக்கைகள் கடுமையாக இருக்க வேண்டும். நான் பெங்களூரை சேர்ந்தவள், இப்போது தென்னிந்திய சினிமாவில் ராஷ்மிகா மந்தனா, நித்யா மேனன், ருக்மணி வசந்த் போன்ற பெங்களூர் ஹீரோயின்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி. கல்யாணியின் லோகா மாதிரி எனக்கும் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில், நல்ல ஆக் ஷன், காதல் கதைகளில் நடிக்க ஆசை'' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !