உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூர்' பாடலை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாபு காலமானார்

சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூர்' பாடலை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாபு காலமானார்

எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 45 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவரும், மூத்த ஒளிப்பதிவாளருமான பாபு வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார். நாளை அவரின் இறுதி சடங்கு நடக்கிறது

ஒளிப்பதிவாளர் கேஎஸ் பிரசாத்திடம் உதவியாளராக பணியாற்றிய பாபு அன்றைக்கு முன்னணி நடிகர்களாக திகழ்ந்த எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரின் படங்களின் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். சில படங்களில் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய வர முடியாத இடங்களில் பாபுவே ஒளிப்பதிவு செய்துள்ளார். கழுகு, ப்ரியா, பாயும் புலி, போக்கிரி ராஜாவும் இவர் ஒளிப்பதிவு செய்த படங்களே.

இவர் மறைவு குறித்து இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறுகையில், ஒளிப்பதிவாளர் பாபுவை என் கண்கள் என்பேன். என்னுடன் 45 படங்களில் பணியாற்றியவர். பல ஆண்டுகளாக அவருடன் இணைந்து வேலை செய்து இருக்கிறேன். நான் இயக்கிய பல வெற்றி படங்களின் ஒளிப்பதிவாளர் அவர்தான். குறிப்பாக சகலகலா வல்லவன் படத்தை கமர்ஷியலாக ஒளிப்பதிவு செய்தார். ஹேப்பி நியூர் பாடல் இன்றும் பேசப்படுகிறது. ரஜினியின் முரட்டுகாளை சண்டை காட்சி, பாடல் அவ்வளவு பிரபலம். என்னுடன் இணைந்து நல்லவனுக்கு நல்லவன், ஸ்ரீராகவேந்திரா, ஆறில் இருந்து அறுபதுவரை படங்களும் அவர் சினிமா வாழ்வில் முக்கியமானவை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !