காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்'
ADDED : 2 minutes ago
ரித்தி என்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் தீப்தி தாமோதர் தயாரிக்கும் படம் 'கரிகாடன்'. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் காடா நடராஜ், நிரிக்ஷா ஷெட்டி, ரித்தி, மஞ்சு சுவாமி, யஷ் ஷெட்டி,கோவிந்த கவுடா, திவாகர், கிலாடி சூர்யா, டி.ராகேஷ் பூஜாரி, விஜய் சந்தூர், சந்திரபிரபா, கரிசுப்பு, கிரி, பாலராஜாவாடி, மாஸ்டர் ஆர்யன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கில்லி வெங்கடேஷ் இயக்கியுள்ளார் . அதிஷய் ஜெயின், மற்றும் ஷஷாங்க் சேஷகிரி, ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஜீவன் கவுடா இசை அமைத்துள்ளார்.
காந்தாரா படத்தின் பாணியில் ஆக்ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைப்படமாக உருவாகியுள்ளது என்கிறார் இயக்குனர் கில்லி வெங்கடேஷ்.