உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛பார்டர் 2'வில் வருண் தவான் நடிப்பிற்கு பாராட்டு தெரிவித்த பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் குடும்பத்தினர்

‛பார்டர் 2'வில் வருண் தவான் நடிப்பிற்கு பாராட்டு தெரிவித்த பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் குடும்பத்தினர்

அனுராக் சிங் இயக்கத்தில் சன்னி தியோல், வருண் தவான், தில்ஜித் தோசன்ஜ், அஹான் ஷெட்டி, சோனம் பஜ்வா உள்ளிட்டோர் நடிப்பில் ஹிந்தியில் உருவாகி வரும் படம் ‛பார்டர் 2'. 1971ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்த போரில் பரம்வீர் சக்ரா விருது பெற்ற மறைந்த இந்திய ராணுவ கர்னல் ஹோஷியார் சிங் தஹியா முக்கிய பங்காற்றினார். இவரது வேடத்தில் வருண் தவான் நடித்துள்ளார்.

தற்போது பார்டர் 2 படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசரில் வருண் தவானின் நடிப்பை பார்த்து ஹோஷியார் சிங் தஹியா குடும்பத்தினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

கர்னல் சுஷில் குமார் தஹியா, தனது குடும்பத்தினருடன் இணைந்து தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், நாங்கள் இப்போதுதான் 'பார்டர் 2' டீசரைப் பார்த்தோம். வருண் தவான் நிச்சயமாக அந்தக் கதாபாத்திரத்திற்கு நீதி செய்துள்ளார். டீசர் மிகவும் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. எங்கள் பாரம்பரியம் இத்தகைய உணர்வுடனும் நேர்மையுடனும் சொல்லப்படுவதைக் காண்பது எனக்கும் என் குடும்பத்திற்கும் உண்மையிலேயே ஒரு சிறப்பு வாய்ந்த தருணம். படத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளோம். உங்களுக்கும் முழு படக்குழுவினருக்கும் படத்திற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

'பார்டர் 2' திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 23ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !