'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்!
ADDED : 2 hours ago
நடிகை ருக்மணி வசந்த் 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு பிறகு அவர் 'டாக்சிக், என்டிஆர் நீல்' என பான் இந்தியா படங்கள் அவரது கைவசமாக உள்ளது.
தற்போது ஒரு வெளிநாட்டு பத்திரிகைக்கு ருக்மணி வசந்த் அளித்த பேட்டி ஒன்றில் டாக்சிக் படம் குறித்து கூறியதாவது, நான் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தில், நான் இதற்கு முன்பு நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது ஒரு சவாலான படம். நடிகர் யஷ் மற்றும் இயக்குனர் கீது மோகன்தாஸ் படத்தை அணுகிய விதம், படப்பிடிப்பு நடத்திய விதம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை தந்துள்ளது. என இவ்வாறு தெரிவித்துள்ளார்.