உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல்

அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல்

தொடர் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிற்கு இடையில் சிறு சறுக்கல். கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து ‛மதராஸி' படத்தை இயக்கினார். இந்த படமும் சுமார் ரகம் என்ற அளவிலேயே இருந்தது. இதையடுத்து நடிகர் சிம்புவை வைத்து படம் இயக்கவுள்ளார் என தகவல் பரவியது.

இந்நிலையில் முருகதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, என் அடுத்த படத்தை நான் நீண்ட வருடங்களாக உருவாக்க ஆசைப்பட்ட கிராபிக்ஸ் குரங்கு படத்தை இயக்க போகிறேன். இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம். இதுதான் என் முதல் படமாக உருவாக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இந்த கதையை நான் உதவி இயக்குனராக பணியாற்றிய காலகட்டத்தில் எழுதினேன் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2026-01-02 03:59:52

இவர் படத்தில் குரங்கு கூட நடிக்க வரல போல ,, graphics monkey மட்டும் தான் இனி இவர் சொல்ல இனி கேட்கும். முருகு சங்கு எல்லாம் உயரம் பார்த்தவர்கள் போதும் நீங்கள் அடுத்த தலைமுறைக்கு வழி காட்டுங்கள். எல்லோரும் பாலச்சந்தர் பாரதி ராஜா மணி ரத்னம் போல ஆக முடியாது பல தலைமுறைகள் காண,