உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்!

காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்!


சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து 'மேயாத மான்' படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். பின்னர் 'கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, திருச்சிற்றம்பலம், ரத்னம், டிமான்டி காலனி -2' என பல படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் தற்போது 'டிமான்டி காலனி-3' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் நடிகைகள் தாங்கள் காதலில் விழுந்தாலும் அந்த செய்தி வெளியானால் மார்க்கெட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சீக்ரெட்டாக வைத்திருப்பார்கள்.

ஆனால் பிரியா பவானி சங்கரோ, கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே ராஜவேல் என்பவரை தான் காதலித்து வருவதை ஆரம்பத்திலேயே அறிவித்தார். அதோடு கடந்த சில மாதங்களாக அவர் காதலரை பிரேக் அப் செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அது வதந்தி என்பதை கூறும் வகையில், தற்போது காதலருடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையப் பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி உள்ளார் பிரியா பவானி சங்கர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !