உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாரீசில் நாளை வெளியிடப்படும் வாரணாசி அறிவிப்பு டீசர்!

பாரீசில் நாளை வெளியிடப்படும் வாரணாசி அறிவிப்பு டீசர்!


‛ஆர் ஆர் ஆர்' படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கி வரும் புதிய படம் ‛வாரணாசி'. மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 1300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு டீசர் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது.

இந்த நிலையில் தற்போது இந்த டீசரை பாரீசில் உள்ள லீ கிராண்ட் ரெக்ஸில் ஜனவரி ஐந்தாம் தேதியான நாளை இரவு 9 மணிக்கு திரையிடுகிறார்கள். இங்கு திரையிடப்படும் முதல் இந்திய திரைப்படம் இதுவாகும். இந்த தகவலை இந்திய திரைப்படங்களை பிரெஞ்சு மொழியில் வெளியிடும் விநியோகஸ்தர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதோடு இந்த டீசர் பெரிய திரையில் சிறப்பான வடிவத்தில் காண்பிக்கப்படுவதால் பார்வையாளர்களை பெரிய அளவில் ஈர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !