உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛பத்து நாள் ராஜா' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

‛பத்து நாள் ராஜா' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

கூகுள் குட்டப்பா, கார்டியன் ஆகிய படங்களை இயக்கிய குரு சரவணன் அடுத்து 'பத்து நாள் ராஜா' என்ற படத்தை இயக்குகிறார். இதில் சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதாநாயகியாக மலையாள நடிகை சரண்யா என்பவர் நடிக்கிறார். மேலும் சரவணன், சிங்கம் புலி, பிளாக் பாண்டி, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

நேற்று இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சதீஷ் மற்றும் கதாநாயகி சம்மந்தப்பட்ட காட்சிகளுடன் தொடங்கியுள்ளனர். இந்த படத்திற்கு தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இவரது ஒளிப்பதிவில் நடிப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக சதீஷ் நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !