உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்!

தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்!


மலையாளத்தில் கடந்த வருடத்தில் திரைக்கு வந்த படம் 'மார்கோ'. இதனை ஹனிப் அதேனி இயக்கினார். இப்படம் உச்சகட்ட வன்முறை நிறைந்த படமாக வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது.

இதைத்தொடர்ந்து மார்கோ 2ம் பாகம் உருவாகிறது என அறிவித்தும் அது இன்னும் துவங்கப்படவில்லை. இந்த இயக்குனரின் அடுத்த படம் குறித்து பல தகவல்கள் பரவி வந்த நிலையில் தற்போது இவர் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். முதலில் தில் ராஜூ தரப்பில் நடிகர் அஜித் குமாரை தான் அணுகியுள்ளனர்.

ஆனால், அஜித் தரப்பில் சரியான பதில் கிடைக்காததால் இப்போது அந்த கதையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !