உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்?

சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்?


சரத்குமார் நடித்த 'ஆழி' படமும், ராதிகாவின் 'தாய் கிழவி' படமும் பிப்ரவரி 27ம் தேதி ஒரே நாளில் மோதுகின்றன. மாதவ் ராமதாசன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த ஆழி படம் சில ஆண்டுகளாக தயாராகி வந்தது. ஆழி என்ற தலைப்புக்கு ஏற்ப கடலில் பெரும்பாலான காட்சிகள் நடக்கின்றன. இந்த படத்தின் ரிலீஸ் தேதி 'ஜனநாயகன்' ரிலீஸ் காரணமாக தள்ளாடி வந்தது. இப்போது பிப்ரவரி 27ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

அதேபோல் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிக்கும் 'தாய்க்கிழவி' படம் பிப்ரவரி 20ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. இந்த படமும் திடீரென பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாறி உள்ளது இதனால் கணவன் மனைவி படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது உறுதியாகி உள்ளது இந்த போட்டி கோலிவுட்டிலும் சர்ப்ரைஸை ஏற்படுத்தி உள்ளது நாங்கள் முன்னமே விட்டுக் கொடுத்தோம் தாய்க்கிழவி படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாறியதால் இந்த போட்டி ஏற்பட்டது. இது ஆரோக்கியமான போட்டி தான் என்கிறார்கள் ஆழி படக்குழுவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !