உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எம்ஜிஆர் பற்றி அவதூறு பேச்சு : தெலுங்கு நடிகருக்கு விஷால் கண்டனம்

எம்ஜிஆர் பற்றி அவதூறு பேச்சு : தெலுங்கு நடிகருக்கு விஷால் கண்டனம்


தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்ஜிஆர் பற்றி தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவதூறாகப் பேசினார். அது குறித்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இருந்தாலும் அது பற்றி இதுவரையில் எந்த ஒரு மன்னிப்பையும் ராஜேந்திர பிரசாத் கேட்கவில்லை.

இதனிடையே, நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளருமான விஷால் அவருடைய எக்ஸ் தளத்தில் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

“தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் சமீபத்திய கருத்துக்களைப் பார்ப்பதும் கேட்பதும் அதிர்ச்சியளிக்கிறது மற்றும் வெறுப்பூட்டுகிறது.

அன்புள்ள ஐயா, மிகுந்த மரியாதையுடன் அதே சமயம் கனத்த இதயத்துடன், உங்கள் பேச்சை கண்டித்து, இந்த ட்வீட்டை எழுதுகிறேன். எங்கள் மறைந்த புகழ் பெற்ற நடிகர் ஒரே ஒரு எம்ஜிஆர் அவர்களைப் பற்றி, அவர் ஒரு புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு சிறந்த தலைவரும் ஆவார். மற்றொரு புகழ்பெற்ற நடிகர் காந்தா ராவ் அவர்களைப் புகழ்ந்து பேசியது அழகான செயல். ஆனால் அதே சமயம் மற்றொரு புகழ்பெற்ற நடிகர் எம்ஜிஆர் ஐயா அவர்களை இழிவுபடுத்தி குறைத்து மதிப்பிடுவது எங்கள் மக்களின் உணர்வுகளுக்கு சரியானதல்ல. அவர் இன்னும் என்றென்றும் நினைவு கூறப்படுபவர்.

இதை நீங்கள் சிறந்த முறையில் தெரிந்த ஒரு வழியில் முடிவுக்குக் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன், இது இந்த நேரத்தில் கட்டாயமானது மற்றும் மிக முக்கியமானது. இந்த விஷயத்தில் நீங்கள் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியதற்கு என் மன்னிப்பு, ஏனென்றால் நான் ஒரு நடிகராக இருந்தால், எதிர்காலத்தில் உங்கள் அளவிலான ஒரு நடிகரைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால் நானும் அதையே செய்வேன். நல்ல நம்பிக்கையுடன், கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என்று விஷால் பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் தமிழ்த் திரையுலகத்திலிருந்து முதல் எதிர்ப்புக் குரலாக விஷால் குரல் ஒலித்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !