உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் முனீஷ்காந்த்

மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் முனீஷ்காந்த்


ஜே பி சினிமாஸ் சார்பில் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிக்கும் படத்தில் முனீஷ்காந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை நித்திலன் சுவாமிநாதனின் உதவியாளர் அசோக் ராம் இயக்குகிறார்.

ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்னா, கல்கி, ஜென்சன் திவாகர், வினோத் முன்னா, அனன்யா ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்கிறார், ஆனந்த் காசிநாத் இசையமைக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் கூறும்போது, ''பழமையான கேமரா ஒன்றை மையமாக வைத்து பேண்டஸி காமெடி ஜானரில் இப்படம் தயாராகிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமாக ஒரு அரங்கம் அமைத்து, அதில் படப்பிடிப்பு நடத்துகிறோம்'' என்றார். மிடில் கிளாஸ் படத்திற்கு பிறகு இந்த படத்தில் முனீஷ்காந்த் கதை நாயகனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !