ராதிகா பாலிசியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா?
சென்னையில் நடந்த தாய் கிழவி வெற்றி விழாவில் பேசிய நடிகை ராதிகா, 'இந்த படத்துக்காக லாபத்தில், வியாபாரத்தில் பங்கு என்ற ஒப்பந்தம் அடிப்படையில் சம்பளம் பெற்றேன். தமிழில் இப்படி சம்பளம் வாங்கிய ஒரே நடிகை நான்தான் என்றார். தெலுங்கில் அல்லு அர்ஜூன் போன்ற சில ஹீரோக்கள், ஹிந்தியில் பல ஹீரோக்கள் இப்படி சம்பளம் வாங்குகிறார்கள். கன்னடத்தில் சுதீப் இந்த முறைக்கு மாறினார்.
முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக பெ றுபவர்கள், படத்தின் வியாபாரத்தில் கணிசமான தொகையை போனஸ் சம்பளமாக பெறுகிறார்கள். படம் ஓட, ஓட அல்லது அதிகவிலைக்கு விற்கப்பட்டால் இவர்கள் சம்பளமும்அதிகரிக்கும். தாய் கிழவி படம் 50 கோடியை தாண்டி ஓடிக்கொண்டிருப்பதால் ராதிகா சம்பளம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தமிழில் இந்த முறைக்கு வர நடிகர், நடிகைகள் தயங்குகிறார்கள். காரணம் படம் ஓடாவிட்டால் அவர்களுக்கான சம்பளம் குறைந்துவிடும். இப்போது முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் ஓடாத நிலையில் எனக்கு வழக்கமான முறைப்படி சம்பளம் கொடுத்துவிடுங்கள். லாப, நஷ்டம் உங்க ரிஸ்க் என தயாரிப்பாளர்களிடம் சொல்கிறார்களாம். இந்த நடைமுறை தமிழில் வந்தால் நல்லா இருக்கும் என்று பலர் நினைத்தாலும், நடிகர்கள் நழுவுகிறார்களாம்.