உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குஷ்புவை தொடர்ந்து கணவர் சுந்தர் சியும் அரசியலில் களமிறக்கம் : மதுரை மத்தியில் போட்டி

குஷ்புவை தொடர்ந்து கணவர் சுந்தர் சியும் அரசியலில் களமிறக்கம் : மதுரை மத்தியில் போட்டி

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை குஷ்பு. இயக்குனர் சுந்தர் சியை காதலித்து மணந்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். திமுக.,வில் இணைந்து தனது அரசியல் பயணத்தை துவக்கிய குஷ்பு பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். தற்போது பா.ஜ., கட்சியில் உள்ளார். கடந்தமுறை நடந்த சட்டசபை தேர்தலில் சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டார். அவருக்காக கணவர் சுந்தர் சியும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இருப்பினும் அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். தொடர்ந்து பா.ஜ.,வில் பயணித்து வருகிறார் குஷ்பு.

இந்நிலையில் மனைவி குஷ்புவை போன்று அவரது கணவர் சுந்தர் சியும் அரசியலில் களமிறங்கி உள்ளார். தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக., கூட்டணியில் அங்கும் வகிக்கும் புதிய நீதிக் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் மதுரை, மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பாக அதிமுக., சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளராக சுந்தர் சி அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதன்முறையாக அரசியலில் களம் காண உள்ளார் சுந்தர் சி. கடந்தமுறை மனைவிக்காக பிரச்சாரம் செய்தார் சுந்தர் சி. இந்தமுறை அவரே களம் காண்பதால் அவருக்காக மனைவி குஷ்புவும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். காரணம் அதிமுக., கூட்டணியில் தான் பா.ஜ.,வும் அங்கம் வகிக்கிறது. ஆக கணவர் என்பதையும் தாண்டி தான் கூட்டணி வகிக்கும் கட்சிக்காகவும் நிச்சயம் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !