துல்கர் சல்மான் உடன் பிரச்னையா : மனம் திறந்தார் டொவினோ தாமஸ்
டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடித்த மலையாள படமான பள்ளிச்சட்டம்பி ஏப்ரல் 10ம் தேதி தமிழிலும் ரிலீஸாகிறது. இது குறித்து சென்னையில் பேசிய டொவினோ, ‛‛1957ல் இந்த கதை நடக்கிறது. அந்த காலத்தில் நடந்த சில உண்மை சம்பவத்தின் அடிப்படையில், பல விஷயங்கள் கலந்து கதை நகர்கிறது. இது மத சம்பந்தப்பட்ட கதையா?, பேய் கதையா?, திரில்லர், பழிவாங்கும் கதை என இப்போது சொல்ல முடியாது. பல விஷயங்களையும், என் கேரக்டரையும் சஸ்பென்ஸ் ஆக வைத்து இருக்கிறோம். படம் பார்க்கும்போது பல உண்மைகள் தெரியும்.
நானே இன்னும் படத்தை பார்க்கவில்லை. ரசிகர்களுடன் தியேட்டரில் தான் பார்க்கப் போகிறேன. பள்ளிச்சட்டம்பி என்றால் தேவாலய காவலர் என்ற அர்த்தம். 2018 காலத்தில் இருந்து இந்த கதையை மெருகேற்றி இப்போது எடுத்து இருக்கிறோம். இதில் கயாடு லோஹர் ஹீரோயின். எனக்கும், துல்கர் சல்மானுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் அடிக்கடி பேசிக் கொள்கிறோம். அதற்கு ஆதாரமாக வாட்ஸ்ஆப் சாட்டை கூட காண்பிக்க தயார். சிலர் இப்படி வதந்தி பரவி சந்தோஷப்படுகிறார்கள். இப்படி பரப்பிவிடுவது ஈஸி. நாங்கள் ஒன்றாக இருக்கும்போது இது போன்ற செய்திகளை படித்து சந்தோஷப்படுவோம்.
உண்மையில் நான் உதவி இயக்குனராக துல்கரின் தீவிரம் படத்தில்தான் பணியாற்றினேன். அவருடன் இன்னொரு படத்தில் வில்லனாக நடித்தேன். லோகா படத்தில் இணைந்தோம். இப்போது அடுத்த பாகம் எடுத்து வருகிறோம். சமீபத்தில் இந்த படத்துக்காக நாங்கள் துபாய் சென்று வந்தோம்'' என்றார்.