உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யோகிபாபுவின் 'காகங்கள்'

யோகிபாபுவின் 'காகங்கள்'

'காக்கா முட்டை' மற்றும் 'குற்றமே தண்டனை' போன்ற தேசிய விருது பெற்ற திரைப்படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இயக்கி தயாரித்துள்ள படம் 'காகங்கள்'. யோகி பாபு, கிஷோர், விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகிறது. படம் குறித்து ஆனந்த் அண்ணாமலை கூறும்போது “மனித உணர்வுகள், ஆன்மிகத் தேடல் ஆகிவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முற்றிலும் புதிய களத்தில் புதிய கதை கொண்டு உருவாகி உள்ளது. திறமையான நடிகர்களின் உழைப்பு, தொழில்நுட் கலைஞர்களின் நேர்த்தி என படம் தயாராகி உள்ளது. காகங்கள் மற்ற பறவைகளை விட தனித்துவமான குணங்களை கொண்டது. அந்த குணம்தான் படத்தின் மைய புள்ளி” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !