உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ஹீரோயின் ஆன மனோசித்ரா

மீண்டும் ஹீரோயின் ஆன மனோசித்ரா

டிபிகே இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் டில்லி பாபு தயாரிக்கும் படம் மாயமுகி. பி.எம்.ரவி நாயக் இயக்குகிறார். இன்னொருவன், அவள் பெயர் தமிழரசி , நீர்ப்பறவை, வீரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் மனோ சித்ரா மீண்டும் நாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக ரவிதேஜா வர்மா நடிக்கிறார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம் என்றாலும், தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார்.



இவர்களுடன் சத்யதேவ், தூத்துக்குடி கார்த்திகா, ஆம்னி, சுவாதி உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரகாஷ் என்.பத்மா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜெயன் பாலா இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் மாயமுகி இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.


படம் பற்றி இயக்குனர் ரவி நாயக் கூறியதாவது: தமிழ் சினிமாவில் பேண்டஸி திரைப்படங்களின் வருகை மிக மிக அரிதாகி வரும் நிலையில், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் ஆன்மீக பேண்டஸி திரைப்படமாக உருவாகிறது. பேண்டஸி ஜானர் திரைப்படமாக இருந்தாலும், இப்படத்தின் கதைக்களம் சமூக பிரச்சனைகள் குறித்தும் பேசுகிறது. என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !