கிண்டல் செய்பவர்கள் பற்றி கவலையில்லை : சோனாக்ஷி
ADDED : 1661 days ago
பாலிவுட்டின் பிரபல நடிகையான சோனாக்ஷி சின்ஹா கூறுகையில், சமூகவலைதளத்தில் என்னை கிண்டல் செய்பவர்கள், என்னை என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி ஒரு காலத்தில் கவலைப்பட்டேன். அதற்கு எதிர்வினையும் தருவேன். ஆனால் இப்போது என்னை பாதிக்காத நிலையில் அவற்றை கடந்து செல்ல பழகி கொண்டேன். முகத்தை மறைத்துக் கொண்டு என்னைப்பற்றி தவறாக விமர்சிப்பவர்கள் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என் ரசிகர்கள் பக்கபலமாக இருக்கிறார்கள். சமூகவலைதளத்தில் நான் நானாகவே இருக்கிறேன், அப்படியே தொடருவேன். ஓடிடியோ, தியேட்டரோ எதுவானாலும் சரி கதை பிடித்தால் நடிப்பேன்'' என்றார்.