பயமும், சோகமும் உள்ளது - ராதிகா ஆப்தே
ADDED : 1653 days ago
ஓடிடி தளங்களில் எந்த கட்டுப்பாடும் இல்லாததால் ஆபாச காட்சிகளும், வன்முறைகளும், மதம் தொடர்பான சர்ச்சைகளும் அதிகளவில் இடம் பெற தொடங்கின. சமீபத்தில் இதை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை பிறபித்துள்ளது மத்திய அரசு. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ள நிலையில் இதுப்பற்றி நடிகை ராதிகா ஆப்தே கூறுகையில், ‛‛கருத்து சுதந்திரத்திற்கும், சகிப்புத் தன்மைக்கு இடம் கொண்டுக்க வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். நாம் செல்லும் பாதை குறித்த பயமும், சோகமும் உள்ளது. ஓடிடியால் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அவை எங்கு செல்கின்றன என்பதை இப்போது நம்மால் சொல்ல முடியாது, ஐந்தாறு ஆண்டுகளாவது ஆக வேண்டும் என்கிறார்.