நடிகை மீரா மிதுன் காவல் நீட்டிப்பு
ADDED : 1514 days ago
நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் நீதிமன்றக் காவல், செப்., 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில் 'வீடியோ' வெளியிட்டார் நடிகை மீரா மிதுன். இது தொடர்பாக, வி.சி., கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் மீராமிதுன் மீது போலீசில் புகார் அளித்தன. புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பிற்காக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் நீதிமன்றக் காவலை, செப்., 9ம் தேதி வரை நீட்டித்து, நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.