உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கலாட்டா ராணி : புதிய நிகழ்ச்சி

கலாட்டா ராணி : புதிய நிகழ்ச்சி

சின்னத்திரையில் தொடர்களை விட ரியாலிட்டி ஷோக்கள் தான் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் எல்லா சேனல்களும் விதவிதமான ஷோக்களை உருவாக்கி ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் நாளை(அக்., 10) முதல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது கலாட்டா ராணி நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்து கொள்கிற வேடிக்கை, காமெடி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு 3 சுற்றுகளாக விதவிதமான போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுகிறவர்கள் கலாட்டா ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளை வெல்வார்கள். இந்த நிகழ்ச்சியை ஆதவன் மற்றும் ஜெயச்சந்திரன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள். நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் பகல்12 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !