உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெற்ற தாயும் பாரத அன்னையும் ஒன்றே!

பெற்ற தாயும் பாரத அன்னையும் ஒன்றே!

* பெற்ற தாயும், பாரத அன்னையும் ஒன்றே. அவளை போற்றிக் காப்பது நம்  கடமை.* தீமையை எதிர்க்காமல் இருக்காதே.  அதைத் தடுத்து தர்மத்தைக் காக்க  வீரமுடன் எழுந்திரு.* மங்களமானவர் கடவுள். அவர் செய்யும் தீமையிலும் கூட நன்மை நிச்சயம்  இருக்கும்.* கடவுளின் ஆற்றலுக்கு எல்லை இல்லை. அதை மறந்து தெய்வீக அறிவில்  குறை காண்பது நல்லதல்ல.* அருட்சக்தி ஒரு போதும் கண்மூடித்தனமாக வேலை செய்வதில்லை. அது  ஒருபோதும் வீணாவதில்லை.* கண்களில் பயமின்மை, கபடமற்ற குணம் இருக்கட்டும். பேச்சிலும் ஆவேசம்  தவிர்த்து இனிமை கலக்கட்டும்.* கவலையற்ற சிரிப்பு, அஞ்சாத நெஞ்சம், சந்தோஷ மனப்பான்மை,  நன்னம்பிக்கை கொண்டவனாக எப்போதும் இரு.* சுகத்தை மட்டுமே விரும்புவதால் துக்கத்தை கண்டு அஞ்சுகிறாய். அதனால்  அடுத்தவரை அண்டிப் பிழைக்கும் நிலை உருவாகிறது.* ’நான்’ என்ற அகந்தை எப்படி வந்தாலும் களைவது நல்லது.* பராசக்தியிடம் உன்னை ஒரு கருவியாக்கு. அவளின்றி உன்னால் எதுவும்  செய்ய முடியாது.* பராசக்தியை வழிபடு. எல்லாச் செயல்களையும் விரைவாகவும், உறுதியாகவும்  நிறைவேற்றி வைப்பாள்.* உலகை வழிநடத்தும் சர்வஞானி கடவுள்.* மனிதர்களை நேசிப்பதோடு சேவை செய்வதில் மகிழ்ச்சி கொள். ஆனால்  பாராட்டை எதிர்பார்க்காதே. * கடவுளின் பணியாளனாக இருப்பது மதிப்பு மிக்கது. அவருக்கு அடிமையாக  இருக்க விரும்பாதே.  - சொல்கிறார் அரவிந்தர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !