ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம்நாள்: முத்துசாயக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்
ADDED :2111 days ago
ஸ்ரீரங்கம்: ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசிபெருவிழா பகல் பத்து இரண்டாம் நாள், நம்பெருமாள் முத்துசாயக் கொண்டை, ரத்தின அபயஹஸ்தம், அண்டபேரண்ட பதக்கம், ஹம்சம் காதுகாப்பு, லட்சுமி பதக்கம், முத்துமாலை, காசு மாலை, பவள மாலை அலங்காரத்தில், மூலஸ்தானத்தில் இருந்து அர்சூனா மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.