உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இதை பாடினால் படிப்பு வரும்..!

இதை பாடினால் படிப்பு வரும்..!

ஆஞ்சநேயரை நினைத்து இப்பாடலை பாடினால் கல்வி, செல்வம், வீரம், மன நிம்மதி கிடைக்கும். அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவிஅஞ்சிலே ஒன்று ஆறாகஆருயிர் காக்க ஏகிஅஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்பொருள் : வாயுவுக்கு பிறந்தவன் அனுமன். ஆகாயத்தில் பறந்து, கடல் தாண்டி இலங்கை சென்றான். பூமிதேவியின் மகளான சீதையை கண்டான். அவளை மீட்க இலங்கைக்கு நெருப்பு வைத்தான். அவன் தன்னையே நமக்கு தந்து பாதுகாப்பான்.விளக்கம் : பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவுக்கு பிறந்தான். வானில் (ஆகாயம்) பறந்தான். கடலை (நீர்) தாண்டினான். ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்கு பூமியை (மண்) தோண்டும் போது கிடைத்த சீதையைக் கண்டான். பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை இலங்கைக்கு வைத்தான். ஆக பஞ்சபூதங்களையும் அடக்கியவர் அனுமன். அவரை வழிபட்டால் பூதங்கள் நமக்கு நன்மையே செய்யும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !