ஏழுமலை இருக்கநமக்கென்ன மனக்கவலை!
ஆறு மலைகளைக் கடந்தபின் ஏழாவது மலையான வேங்கடமலையில் திருப்பதி ஏழுமலையான் அருள்பாலிக்கிறார். இந்த ஏழுமலைகளின் பெயர்க்காரணத்தை அறிவோமா!
1. வேங்கட மலை: ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு, ‘வேங்கடமலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாஜலபதியாக (சீனிவாசன்) மகா விஷ்ணு காட்சி தருகிறார்.
2. சேஷ மலை: பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷனே மலையாக வந்தார். ‘சேஷன்’ என்றால் ‘பாம்பு’. எனவே இது ‘சேஷ மலை’ எனப்படுகிறது.
3. வேத மலை: வேதங்கள் மலை வடிவாக நின்று பெருமாளை வழிபட்டன. இதுவே ‘வேதமலை’ ஆகும்.
4. கருட மலை: வைகுண்டத்திலிருந்து ஒரு மலையை எடுத்து வந்த கருடாழ்வார் திருப்பதி மலையில் வைத்தார். இதற்கு, ‘கருடமலை’ என்று பெயர்.
5. விருஷப மலை: விருஷபன் என்னும் அசுரன், இங்கு வழிபட்டு மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இங்கு ‘விருஷப மலை’ உள்ளது.
6. அஞ்சன மலை: அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க, திருப்பதியிலுள்ள ஆதிவராஹரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக அனுமனை குழந்தையாகப் பெற்றாள். இவளது பெயரில் உள்ள மலை ‘அஞ்சன மலை’ .
இந்த ஏழுமலைகளையும் ஏறி வருவோருக்கு மனக்கவலை மறையும். ஏழேழு பிறவிக்கும் நன்மை கிடைக்கும்.