பழநி முருகன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
                              ADDED :2062 days ago 
                            
                          
                           பழநி: பழநி முருகன் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. பழநி மலைக்கோயிலில் மாசி மகத்தையொட்டி பாரவேல் மண்டபத்தில் யாக சாலையில் 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி, கும்ப கலசங்கள் வைத்து, யாகம் நடத்தப்பட்டது. மூலவருக்கு உச்சிகால பூஜையில் புனிதநீர் அபிஷேகம், சங்காபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பழநி, கிழக்கு ரத விதியில் உள்ள ஊர்கோயில் எனும் பெரியநாயகியம்மன் கோயிலில் மாலையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.