உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தம்பிக்கலையசுவாமி கோவிலில் மண்டலாபிஷேக விழா நிறைவு

தம்பிக்கலையசுவாமி கோவிலில் மண்டலாபிஷேக விழா நிறைவு

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே தம்பிக்கலையசுவாமி கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று காலை நடந்தது.

ஓலப்பாளையம், முருக்கங்காட்டுவலசு , தம்பிக்கலையசுவாமிக்கு கடந்த பிப்ரவரி 26 ம் தேதி இரண்டாவது மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தினசரி மதியம் 12 மணியளவில் மண்டல அபிஷேக விழா நடந்தது. 24 நாட்கள் முடிவுற்ற நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4.45 மணியளவில் யாக பூஜை துவங்கப்பட்டது. தொடர்ந்து தம்பிக்கலையசுவாமிக்கு 16 திரவியங்களில் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காவிரி, அமராவதி தீர்த்தங்களில் தீர்த்த அபிஷேகம் நடந்தது.சுவாமியை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அபிஷேக ஆராதனை நடந்தது.அணைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குலத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !