உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தலைமுறைக்கும் புண்ணியம் சேர...

தலைமுறைக்கும் புண்ணியம் சேர...

 ராமநாமத்தை கோடிமுறை எழுதுவதற்கு ராம கோடி என்று பெயர். இதற்காக தினமும் நீராடியதும் பக்தியுடன் எழுதுவது அவசியம். ராமகோடி எழுதுவதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர்கள் தினமும் 1000 முறை ராம் என்றோ ஸ்ரீராம ஜெயம் என்றோ எழுதினால் போதும். 30 ஆண்டுகளில் இந்த எண்ணம் பூர்த்தியாகி விடும். எழுதிய நோட்டுகளை ராமனாகவே பாவித்து பூஜையறையில் வைப்பது நல்லது. எண்ணிக்கையில் மட்டும் கவனம் வைக்காமல் பக்தியோடு எழுத அதுவே தவமாக மாறும். இந்த மந்திர நோட்டுகளை வைத்து வழிபட்டால் 21 தலைமுறைக்கும் புண்ணியம் தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !