உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு

சங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு

மதுரை : சங்கர லிங்கம்  சுவாமி கோவிலில்  தேய்பிறை   பிரதோஷம், சிறப்பு அலங்கார வழிபாடு நடைபெற்றது.    

மதுரை   மாவட்டம்,  மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் நந்திதேவருக்கும், சங்கர லிங்கம் சுவாமிக்கும்,  சித்திரை  மாதம்  தேய்பிறை  பிரதோஷம் சிறப்பு  அர்ச்சனை,  அலங்கார வழிபாடு நடைபெற்றது. உலகையே அச்சுருத்தி, மக்களைத் துயரப்படுத்தும் கொரோனா  நோயிலிருந்து விடுபடவும், சமூக நல்லிணக்கம் வளரவும் அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  பக்தர்கள் யாருக்கும் அனுமதியின்றி பூஜைகள் நடைபெற்றது.  முன்னதாக நந்தியம் பெருமாளுக்கு  எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்கவ்யம்,  பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு , தேன்,  பஞ்சாமிர்தம்,  ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது.  சுவாமி, சந்தனக் காப்பு  அலங்காரத்தில்  அருள் பாலித்தார்.    ரமேஷ் அய்யர், சங்கர நாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை  நிர்வாகிகள் பூஜைகள் ஏற்பாடு  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !