கோவில்களை கிழக்கு திசை நோக்கிஅமைப்பது ஏன்?
ADDED :2053 days ago
இருண்டு கிடக்கும் உலகம் ஒளி பெறும் திசை கிழக்கு. கீழ்வானில் சூரிய உதயம் வந்ததும், உயிர்கள் இயங்கத் தொடங்குகின்றன. அருட்சக்தி குடியிருக்கும் கோவிலை முதல் திசையான கிழக்கு நோக்கி அமைக்கின்றனர். எந்த நல்ல செயலையும் கிழக்கு நோக்கிச் செய்வது சிறப்பு.