கன்னிவாடியில் விநாயகர் சிலைகள் கரைப்பு
ADDED :1981 days ago
கன்னிவாடி:சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் நடத்த தடை உள்ளது. இதனால் கன்னிவாடியில் ஹிந்து அமைப்பினர் வீடுகள், கோயில்களில் சிலை வைத்து வழி பட்டனர்.நேற்று ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவாஜி தலைமையில் நிர்வாகிகள் இரு சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்துச்சென்று, மச்சக்குளத்தில் கரைத்தனர்.