திருப்பரங்குன்றத்தில் சுவாமி புறப்பாடு ரத்து
ADDED :1995 days ago
திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணிமூல திருவிழாவில் பாண்டிய ராஜாவாக கலந்து கொள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்படுவர். இந்தாண்டு கொரோனா தடை உத்தரவால் இத்திருவிழா ரத்தானதால் குன்றத்து சுவாமி புறப்பாடும் ரத்து செய்யப்பட்டுள்ளது என கோயில் துணைகமிஷனர் ராமசாமி தெரிவித்தார்.